Sunday, 26 December 2010
கடமை உணர்ச்சி
முஸ்லிம் சமூகத்தின் கல்வி நிலை பற்றிப் பேசும் ஒரு நிகழ்வுக்குச் சென்றிருந்தேன்.
அங்கு உயரதிகாரி ஒருவர் தெரிவித்த கருத்துக்களும் புள்ளி விபரங்களும் எல்லோரினதும் கவனத்தை ஈர்த்தன.
அவர் தனது உரையில் நகைச்சுவையாகக் குறிப்பிட்ட ஒரு விடயத்தை உங்களிடம் சொல்ல நினைக்கிறேன்.
ஒரு முஸ்லிம் மாணவனின் தந்தையைப் பார்த்து ஆசிரியர் ஒருவர் "ஏன் உங்கள் மகன் முட்டை வியாபாரம் செய்கிறான்?" எனக் கேட்டிருக்கிறார். அதற்கு அந்தத் தந்தையோ " நீங்கள் அவனுக்கு கொடுத்த முட்டைகளைத்தான் அப்போது அவன் விற்றுக் கொண்டிருக்கிறான்" என்றாராம்.
நீங்கள் ஒழுங்காகப் படிப்பிக்காததால்தான் அவன் இன்று முட்டை வியாபாரம் செய்ய வேண்டி ஏற்பட்டுள்ளது என்பதைத்தான் அந்தத் தந்தை மறைமுகமாகச் சொல்லியிருக்கிறார்.
அந்த அதிகாரி இன்னுமொரு விடயத்தையும் சொன்னார்.
அவர் அண்மையில் ஒரு சிங்கள பாடசாலைக்கு மாலை வேளையில் சென்றிருக்கிறார். அங்கு ஒரு வகுப்பறையில் குழந்தை ஒன்று அழும் சப்தம் கேட்டிருக்கிறது. ஆச்சரியப்பட்டு போய்ப்பார்த்தபோது அங்கு ஒரு ஆசிரியை தனது கைக் குழந்தையை வைத்துக் கொண்டு பாடம் நடத்திக் கொண்டிருந்தாராம்.
தான் குழந்தையைப் பெறுவதற்காக எடுத்த விடுமுறையில் விடுபட்ட பாடத்தைப் பூர்த்தி செய்வதற்காகவே அவர் அவ்வாறு வகுப்பை நடத்தியிருக்கிறார்.
அந்த ஆசிரியையின் கடமை உணர்ச்சி எப்படியிருக்கிறது?
Thursday, 16 December 2010
திருட்டுத்தனம்
அண்மையில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த சகோதரர் ஒருவரை எதேச்சையாகச் சந்திக்கக் கிடைத்தது. ஒரு வெளியீட்டகத்தை நடத்தி வருபவர் அவர்.
அவர் என்னிடம் சொன்ன பின்வரும் விடயம் எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் ஆச்சரியம் தரக் கூடியது.
"நான் இந்தியாவைச் சேர்ந்த பிரபல இஸ்லாமிய பிரசாரகர் ஒருவரின் ஆங்கில மொழி மூல உரைகளடங்களிய இறுவட்டுக்களை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டு வருகிறேன். நான்தான் அதற்கு குரலும் கொடுக்கிறேன். இதனை குறித்த பிரசாரகரின் அனுமதியுடன்தான் நாம் செய்கிறோம்.
அண்மையில் நாங்கள் வெளியிட்ட ஒரு தமிழ் மொழி மூல இறுவட்டை இலங்கையிலுள்ள ஒரு தஃவா பிரசார அமைப்பினர் எமது நிறுவனத்தின் பெயரை அழித்து விட்டு அவர்களது பெயரைப் பொறித்து இலங்கை முழுவதும் விற்பனை செய்திருக்கிறார்கள். ஒரு இலங்கை நண்பரின் வீட்டில் குறித்த இறுவட்டு ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தபோதுதான் என்னால் இந்தத் `திருட்டுத்தனத்தை' கண்டுபிடிக்க முடிந்தது."
தஃவா செய்யத்தான் வேண்டும். ஆனால் திருட்டுத்தனமாகச் செய்து குறுக்குவழிகளில் சுவர்க்கம் போக முனையக் கூடாது அல்லவா?
Thursday, 9 December 2010
இப்படியும் ஒரு கல்நெஞ்சன்
இரு வாரங்களுக்கு முன்னர் ஒரு வயதான முஸ்லிம் சகோதரர் எமது அலுவலகத்திற்கு வந்திருந்தார். தமது குடும்பத்தில் நடந்த ஒரு அலவச் சம்பவத்தை எம்முடன் பகிர்ந்து கொண்டார்.
அவரது மனைவிக்கு சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் என வைத்தியர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க தமது மகன் தனது சிறுநீரகம் ஒன்றை வழங்க முன்வந்துள்ளார். ஆனால் அவர் அதற்காக சுமார் 60 ஆயிரம் ரூபா பணத்தைக் கேட்டிருக்கிறார்.
இவர்களும் அதைப் பெரிதுபடுத்தாது பணத்தைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அந்த `அன்பு மகனோ' பணத்தைப் பெற்றுக் கொண்டு சிறுநீரகத்தை தர மறுத்திருக்கிறார்.
தனக்கு வழங்கப்பட்ட பணம் போதாது என்றும் மேலதிகமாக பணம் தருமாறும் அவர் கேட்டிருக்கிறார்.
தற்போது பெற்றோர் வசித்து வரும் வீட்டை விற்றாவது தனது தொழிலுக்காகப் பணம் தருமாறு கேட்டிருக்கிறார்.
மகனின் இந்தப் பிடிவாதம் மற்றும் மனிதாபிமானமற்ற செயல் காரணமாக இதுவரை அந்தத் தாய்க்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவில்லை.
மகனின் இந்த செயலினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அந்தத் தந்தை பத்திரிகை வாயிலாக பொது மக்களிடமிருந்து உதவிகளைப் பெற்றுத் தருமாறு கோரவே எமது அலுவலகத்துக்கு வந்திருந்தார்.
இப்படியும் ஒரு கல்நெஞ்சன் இருக்கிறானே?
அவரது மனைவிக்கு சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் என வைத்தியர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க தமது மகன் தனது சிறுநீரகம் ஒன்றை வழங்க முன்வந்துள்ளார். ஆனால் அவர் அதற்காக சுமார் 60 ஆயிரம் ரூபா பணத்தைக் கேட்டிருக்கிறார்.
இவர்களும் அதைப் பெரிதுபடுத்தாது பணத்தைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அந்த `அன்பு மகனோ' பணத்தைப் பெற்றுக் கொண்டு சிறுநீரகத்தை தர மறுத்திருக்கிறார்.
தனக்கு வழங்கப்பட்ட பணம் போதாது என்றும் மேலதிகமாக பணம் தருமாறும் அவர் கேட்டிருக்கிறார்.
தற்போது பெற்றோர் வசித்து வரும் வீட்டை விற்றாவது தனது தொழிலுக்காகப் பணம் தருமாறு கேட்டிருக்கிறார்.
மகனின் இந்தப் பிடிவாதம் மற்றும் மனிதாபிமானமற்ற செயல் காரணமாக இதுவரை அந்தத் தாய்க்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவில்லை.
மகனின் இந்த செயலினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அந்தத் தந்தை பத்திரிகை வாயிலாக பொது மக்களிடமிருந்து உதவிகளைப் பெற்றுத் தருமாறு கோரவே எமது அலுவலகத்துக்கு வந்திருந்தார்.
இப்படியும் ஒரு கல்நெஞ்சன் இருக்கிறானே?
Monday, 6 December 2010
அரசியல் பண்புகள்
அண்மையில் கொழும்பிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு சாப்பிடச் சென்றிருந்தேன்.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் தனது சகாக்கள் சகிதம் அங்கு உணவருந்த வந்திருந்தார்.
ஏற்கனவே அந்த ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த குறித்த அரசியல்வாதியின் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இவருக்குமிடையில் சமகால அரசியல் விடயங்கள் குறித்து பேச்சு வளர்ந்தது.
சமகால அரசியல் போக்குகள் குறித்து அதிகம் சலிப்படைந்தவராகக் காணப்பட்ட அந்த அரசியல்வாதி தான் அரசியலிலிருந்து ஒதுங்கப் போவதாகவும் தற்போது அரசியல் என்பது போட்டி, பொறாமை, நயவஞ்சகத்தனம், குத்து வெட்டுக்கள் நிறைந்த ஒன்றாக மாறிவிட்டமையே தனது முடிவுக்குக் காரணம் என்றும் குறிப்பிட்டார்.
உண்மையில் எல்லா அரசியல்வாதிகளும் இவரைப் போன்று இன்றைய அரசியலை நன்கு விளங்கி வைத்திருக்கிறார்கள்தான். ஆனால் என்னவோ தெரியவில்லை. அவர்கள் அரசியலை விடுவதாகவோ அல்லது இந்த `அரசியல் பண்புகள்' அவர்களை விடுவதாகவோ இல்லை என்பது மட்டும் உண்மையிலும் உண்மை.
Thursday, 2 December 2010
இப்படியும் ஓர் இபாதத்
சென்ற வாரத்துக்கு முந்திய வாரம் `ரீலோட் இலஞ்சம்' பற்றி எழுதியிருந்தேன்.
இந்த வாரம் புனித மக்கா நகரிலேயே இலஞ்சம் கொடுத்து ஹஜ் செய்த நமமவர்களைப் பற்றிய ஒரு சம்பவத்தை உங்களிடம் சொல்ல நினைக்கிறேன்.
கடந்த வெள்ளிக் கிழமை கொழும்பில் இடம்பெற்ற குத்பா பிரசங்கம் ஒன்றில்தான் இந்த சம்பவத்தை இமாமவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.
இலட்சக் கணக்கான யாத்திரிகர்கள் மத்தியில் தாமும் முண்டியடித்துக் கொண்டு தமது கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என நினைப்பதில் தவறில்லை. ஆனால் நமது நாட்டைச் சேர்ந்த சில யாத்திரிகர்களோ கடமைகளின் போது முன்வரிசையில் இடம்பிடிப்பதற்காக அங்குள்ள ஏற்பாட்டாளர்களுக்கு இலஞ்சம் கொடுத்துவிட்டு வேறு நாட்டு யாத்திரிகர்களுக்குச் சொந்தமான வாகனங்களில் ஏறிச் சென்று முன்னணியில் இடம்பிடித்துக் கொண்டார்களாம்.
நமது நாட்டின் பெருமையை அந்தப் புனித மண்ணிலும் நிலைநாட்டிய பெருமை இந்த `ஹாஜி'களைத்தான் சாரும் அல்லவா?
Wednesday, 24 November 2010
டெக்னிக்
சில வாரங்களுக்கு முன்னர் என்னுடைய நண்பர் ஒருவர் தனது வேலைவாய்ப்பு விடயமாக கல்வித் துறையிலுள்ள முஸ்லிம் அதிகாரி ஒருவரைச் சந்திக்கச் சென்றிருந்தார்.
குறித்த வேலைவாய்ப்பை எப்படிப் பெற்றுக் கொள்ளலாம் என சில ஆலோசனைகளை வழங்கிய அந்த அதிகாரி வேறு சில அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்கள் மூலமாகவே எனது நண்பர் எதிர்பார்க்கும் வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
பின்னர் "தம்பி... என க்கு ஒரு சின்ன உதவி செய்ய முடியுமா?" எனக் கேட்டுவிட்டு "என்னுடைய மொபைலுக்கு ஒரு சிறு தொகைக்கு ரீ லோட் போட வேண்டும்" என்றிருக்கிறார்.
எனது நண்பரும் சரி எனச் சொல்லிவிட்டு தன்னுடைய கையடக்கத் தொலைபேசி மூலமாக அந்த இடத்திலேயே ஒரு தொகையை அந்த அதிகாரியின் மொபைலுக்கு மாற்றீடு செய்திருக்கிறார்.
இச் சம்பவத்தைக் கூறிய எனது நண்பர், குறித்த அதிகாரி தன்னிடமிருந்து எதையோ எதிர்பார்த்ததாகவும் ஆனால் எதுவும் கிடைக்காது எனத் தெரிந்த நிலையிலேயே ரீலோட் தந்திரத்தைப் பாவித்ததாகவும் குறிப்பிட்டார்.
போக்குவரத்துப் பொலிசார் அடிக்கடி பயன்படுத்தும் இந்த இலஞ்சம் வாங்கும் டெக்னிக்கை தற்போது அதிகாரிகளும் கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்பதற்கு இந்தச் சம்பவம் நல்ல உதாரணம்தான் போங்கள்...
Sunday, 14 November 2010
விடிவெள்ளி
விடிவெள்ளியின் இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகும் இக் காலப்பகுதியில் அதன் ஆரம்ப காலத்தை நினைத்துப் பார்க்கிறேன்.
விடிவெள்ளி என்றொரு பத்திரிகை வெளிவரவுள்ளதை அறிந்து கொண்ட எனது ஊடக நண்பர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அது பற்றிய தனது நிலைப்பாட்டை பகிர்ந்து கொண்டார்.
இப்படியொரு பத்திரிகை அவசியம்தானா என்றும் அது பற்றி தனக்கு சில சந்தேகங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டார். நானும் என்னால் முடிந்த விளக்கங்களை அளித்தேன். ஆனாலும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.
இது நடந்த சில மாதங்களின் பின்னர் தொடர்பு கொண்ட அவர் விடிவெள்ளியின் பணியை மெச்சியதோடு தன்னுடைய ஆக்கம் ஒன்றினை விடிவெள்ளியில் பிரசுரிக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.
மட்டுமன்றி சில மாதங்களுக்கு முன்னர் என்னை நேரில் சந்தித்த அவர் தனக்கு விடிவெள்ளியில் ஒரு வேலைவாய்ப்பைத் தர முடியுமா என்றும் கேட்டார்.
இதேபோன்றுதான் அப்போது விடிவெள்ளியை கடுமையாக விமர்சித்த பலரும் இன்று எம்மை அணுகி அவர்களது செய்திகளையும் கட்டுரைகளையும் பிரசுரிக்குமாறு வேண்டுகோள் விடுப்பதையும் விடிவெள்ளியின் வளர்ச்சிக்கு பங்களிப்பு நல்க முன்வருவதையும் எம்மால் அவதானிக்க முடிகிறது.
விடிவெள்ளியை சந்தேகக் கண்கொண்டு நோக்கியவர்களை சந்தோஷிக்கச் செய்து விட்டோமே...?
அல்ஹம்துலில்லாஹ்.
விடிவெள்ளி என்றொரு பத்திரிகை வெளிவரவுள்ளதை அறிந்து கொண்ட எனது ஊடக நண்பர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அது பற்றிய தனது நிலைப்பாட்டை பகிர்ந்து கொண்டார்.
இப்படியொரு பத்திரிகை அவசியம்தானா என்றும் அது பற்றி தனக்கு சில சந்தேகங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டார். நானும் என்னால் முடிந்த விளக்கங்களை அளித்தேன். ஆனாலும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.
இது நடந்த சில மாதங்களின் பின்னர் தொடர்பு கொண்ட அவர் விடிவெள்ளியின் பணியை மெச்சியதோடு தன்னுடைய ஆக்கம் ஒன்றினை விடிவெள்ளியில் பிரசுரிக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.
மட்டுமன்றி சில மாதங்களுக்கு முன்னர் என்னை நேரில் சந்தித்த அவர் தனக்கு விடிவெள்ளியில் ஒரு வேலைவாய்ப்பைத் தர முடியுமா என்றும் கேட்டார்.
இதேபோன்றுதான் அப்போது விடிவெள்ளியை கடுமையாக விமர்சித்த பலரும் இன்று எம்மை அணுகி அவர்களது செய்திகளையும் கட்டுரைகளையும் பிரசுரிக்குமாறு வேண்டுகோள் விடுப்பதையும் விடிவெள்ளியின் வளர்ச்சிக்கு பங்களிப்பு நல்க முன்வருவதையும் எம்மால் அவதானிக்க முடிகிறது.
விடிவெள்ளியை சந்தேகக் கண்கொண்டு நோக்கியவர்களை சந்தோஷிக்கச் செய்து விட்டோமே...?
அல்ஹம்துலில்லாஹ்.
எப்படியெல்லாம் கிளம்புறாங்கப்பா...?
சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பு மருதானை பகுதியில் நடந்து சென்று கொண்டிருக்கையில் "தொர..தொர...அஸ்ஸலாமு அலைக்கும்..." என அழைக்கும் குரல் கேட்டது.
நான் கேட்டும் கேட்காதது போல் நடந்தாலும் அக்குரல் விடவில்லை. பின்தொடர்ந்து வந்து கையைப் பிடித்து இழுத்து "தொர... நான் சொல்றத்த கொஞ்சம் கேளுங்க... எனக்கு ஆஸ்துமா நோய் தொர... முடிந்தால் 48 ரூபாய்க்கு ஒரு குளிசை பக்கெற் வாங்கித் தர முடியுமா?" எனக் கேட்டார். நான் 100 ரூபா பணத்தை அவரிடம் நீட்டிய போது "இல்ல தொர... நீங்களே உங்க கையால வாங்கித் தாங்க...அல்லாஹ்ட பறக்கத் உங்களுக்கு கிடைக்கும்" என்றார்.
அருகிலுள்ள பார்மசிக்குச் சென்று அவர் கேட்ட குளிசையை அதே விலைக்கு வாங்கிக் கொடுத்தேன். என் முன்னாலேயே ஒரு குளிசையை விழுங்கினார்.
மீதி 52 ரூபாவையும் அவரிடமே கொடுத்துவிட்டு நான் நடையைக் கட்டியபோது மீண்டும் அழைத்தார் "தொர... வீட்ட புள்ளைகலெல்லாம் ஒரு கிழமையா ஒழுங்கா சாப்பிடல்ல தொர... முடிஞ்சா...." என்று இழுத்தார்... நானும் பரிதாபத்தில் இன்னும் சில நூறு ரூபாய்களைக் கொடுத்துவிட்டு அவரது கஷ்ட நிலையைப் பற்றிக் கவலைப்பட்டவாறே நடந்தேன்.. ஆனால் துரதிஷ்டவசமாக ஓரிரு நாட்களின் பின்னர்தான் அவரது சுயரூபம் தெரியவந்தது. அவர் தனது நோயைப் பயன்படுத்தி இப்படித்தான் எல்லோரையும் ஏமாற்றிப் பிழைப்பவர் என்று.... சில தினங்களுக்கு முன்னர் கூட அவர் இதே பாணியில் கிராண்ட்பாஸ் பகுதியில் பிச்சை எடுப்பதை கண்டேன்...
எப்படியெல்லாம் கிளம்புறாங்கப்பா...?
நான் கேட்டும் கேட்காதது போல் நடந்தாலும் அக்குரல் விடவில்லை. பின்தொடர்ந்து வந்து கையைப் பிடித்து இழுத்து "தொர... நான் சொல்றத்த கொஞ்சம் கேளுங்க... எனக்கு ஆஸ்துமா நோய் தொர... முடிந்தால் 48 ரூபாய்க்கு ஒரு குளிசை பக்கெற் வாங்கித் தர முடியுமா?" எனக் கேட்டார். நான் 100 ரூபா பணத்தை அவரிடம் நீட்டிய போது "இல்ல தொர... நீங்களே உங்க கையால வாங்கித் தாங்க...அல்லாஹ்ட பறக்கத் உங்களுக்கு கிடைக்கும்" என்றார்.
அருகிலுள்ள பார்மசிக்குச் சென்று அவர் கேட்ட குளிசையை அதே விலைக்கு வாங்கிக் கொடுத்தேன். என் முன்னாலேயே ஒரு குளிசையை விழுங்கினார்.
மீதி 52 ரூபாவையும் அவரிடமே கொடுத்துவிட்டு நான் நடையைக் கட்டியபோது மீண்டும் அழைத்தார் "தொர... வீட்ட புள்ளைகலெல்லாம் ஒரு கிழமையா ஒழுங்கா சாப்பிடல்ல தொர... முடிஞ்சா...." என்று இழுத்தார்... நானும் பரிதாபத்தில் இன்னும் சில நூறு ரூபாய்களைக் கொடுத்துவிட்டு அவரது கஷ்ட நிலையைப் பற்றிக் கவலைப்பட்டவாறே நடந்தேன்.. ஆனால் துரதிஷ்டவசமாக ஓரிரு நாட்களின் பின்னர்தான் அவரது சுயரூபம் தெரியவந்தது. அவர் தனது நோயைப் பயன்படுத்தி இப்படித்தான் எல்லோரையும் ஏமாற்றிப் பிழைப்பவர் என்று.... சில தினங்களுக்கு முன்னர் கூட அவர் இதே பாணியில் கிராண்ட்பாஸ் பகுதியில் பிச்சை எடுப்பதை கண்டேன்...
எப்படியெல்லாம் கிளம்புறாங்கப்பா...?
Thursday, 28 October 2010
`முஸீபத்......!'
ஒரு வார காலத்திற்கு முன்னர் கொழும்பிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு ஏற்பாட்டாளர்களின் அழைப்பின்பேரில் செய்தி சேகரிக்கச் சென்றிருந்தோம்.
மிக முக்கியமான உலமாக்கள் பங்கேற்றிருந்த இந் நிகழ்வை கமெராவில் படம் பிடிப்பதற்கு முயற்சித்தபோது எம்மை நோக்கி வந்த இருவர் பள்ளிவாசலுக்குள் போட்டோ எடுப்பது கூடாது என்றார்கள். அதில் ஒருவர் "இது `முஸீபத்'.... இந்த முஸீபத்தையெல்லாம் பள்ளிக்குள் கொண்டு வருகிறீர்களே"என்று சூடாகினார்.
பள்ளிவாசலின் புனிதத் தன்மையை மதித்தும் கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்துவதை தவிர்க்கும் நோக்கிலும் நாம் அமைதியாக இருந்துவிட்டோம்.
இச் சம்பவம் நடந்தபோது இந்த 21 ஆம் நூற்றாண்டில் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களே என்றுதான் எண்ணத் தோன்றியது.
கலாநிதி யூசுப் அல் கர்ளாவி அவர்கள் சில வருடங்களுக்கு முன்னர் குறிப்பிட்ட கருத்து இந்த இடத்தில் எனக்கு ஞாபகத்துக்கு வருகின்றது.
"யூதர்களும் இஸ்லாத்தின் எதிரிகளும் செவ்வாய்க் கிரகத்தில் ஆராய்ச்சி நடத்துவது பற்றிச் சிந்திக்கிறார்கள். ஆனால் முஸ்லிம் சமூகமோ புகைப்படம் எடுப்பது ஹலாலா? ஹராமா? என விவாதிப்பதில் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறது."
அன்று மட்டுமல்ல; இன்றும் கூட பொருந்துகின்ற எவ்வளவு ஆழமான கருத்து இது!
Friday, 22 October 2010
எஸ்.எம்.எஸ் முட்டாள்கள்!
சில வாரங்களுக்கு முன்னர் எனது நண்பர் ஒருவரின் கையடக்கத் தொலைபேசிக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்தது.
அதில் "சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹீ... சுப்ஹானல்லாஹில் அழீம்...." என ஆரம்பமாகும் பிரார்த்தனை ஒன்றைக் குறிப்பிட்டு குறித்த கலிமாவை 12 பேருக்கு உடனடியாக எஸ்.எம்.எஸ். மூலமாக அனுப்புமாறும் அவ்வாறு அனுப்பினால் 12 மணி நேரத்திற்குள் பொருளாதார நிலை மேம்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மட்டுமன்றி இந்தச் செய்தி 100 வீதம் உத்தரவாதம் கொண்டது எனவும் தயவு செய்து இதனை அலட்சியம் செய்து விட வேண்டாம் என்றும் அதில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
இந்தக் குறுஞ் செய்தியை பார்த்த போது சிரிப்புத்தான் வந்தது. முன்னர் `மக்கா மதீனாவில் நடந்த உண்மைச் சம்பவம்' எனக் குறிப்பிட்டு ஒரு துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்படும். அதனை போட்டோ பிரதி செய்து விநியோகிக்குமாறும் அவ்வாறு செய்தால் சில தினங்களுக்குள் எதிர்பார்த்த பலன் கிடைக்கும் எனவும் குறித்த துண்டுப் பிரசுரத்தை கிழித்து வீசினாலோ அல்லது அலட்சியம் செய்தாலோ விரைவில் ஆபத்துக்கள் நேரிடும் என்றும் குறிப்பிட்டிருப்பார்கள்.
பரவாயில்லை... அன்று துண்டுப் பிரசுரம் மூலம் இந்த மூட நம்பிக்கைகளைப் பரப்பிய முட்டாள்கள் இன்று சற்று முன்னேறி எஸ்.எம்.எஸ்.வழியாக பரப்பத் தொடங்கியிருக்கிறார்கள்.
ஆனால் பாவம். இந்த முட்டாள்களின் பொருளாதார நிலை முன்னேறுகிறதோ இல்லையோ கையடக்கத் தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்களின் பொருளாதாரம் மாத்திரம் நிச்சயம் முன்னேற்றமடையும் என்பது மட்டும் உண்மை.
அதில் "சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹீ... சுப்ஹானல்லாஹில் அழீம்...." என ஆரம்பமாகும் பிரார்த்தனை ஒன்றைக் குறிப்பிட்டு குறித்த கலிமாவை 12 பேருக்கு உடனடியாக எஸ்.எம்.எஸ். மூலமாக அனுப்புமாறும் அவ்வாறு அனுப்பினால் 12 மணி நேரத்திற்குள் பொருளாதார நிலை மேம்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மட்டுமன்றி இந்தச் செய்தி 100 வீதம் உத்தரவாதம் கொண்டது எனவும் தயவு செய்து இதனை அலட்சியம் செய்து விட வேண்டாம் என்றும் அதில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
இந்தக் குறுஞ் செய்தியை பார்த்த போது சிரிப்புத்தான் வந்தது. முன்னர் `மக்கா மதீனாவில் நடந்த உண்மைச் சம்பவம்' எனக் குறிப்பிட்டு ஒரு துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்படும். அதனை போட்டோ பிரதி செய்து விநியோகிக்குமாறும் அவ்வாறு செய்தால் சில தினங்களுக்குள் எதிர்பார்த்த பலன் கிடைக்கும் எனவும் குறித்த துண்டுப் பிரசுரத்தை கிழித்து வீசினாலோ அல்லது அலட்சியம் செய்தாலோ விரைவில் ஆபத்துக்கள் நேரிடும் என்றும் குறிப்பிட்டிருப்பார்கள்.
பரவாயில்லை... அன்று துண்டுப் பிரசுரம் மூலம் இந்த மூட நம்பிக்கைகளைப் பரப்பிய முட்டாள்கள் இன்று சற்று முன்னேறி எஸ்.எம்.எஸ்.வழியாக பரப்பத் தொடங்கியிருக்கிறார்கள்.
ஆனால் பாவம். இந்த முட்டாள்களின் பொருளாதார நிலை முன்னேறுகிறதோ இல்லையோ கையடக்கத் தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்களின் பொருளாதாரம் மாத்திரம் நிச்சயம் முன்னேற்றமடையும் என்பது மட்டும் உண்மை.
ஆசிரியர்களுக்குப் புரிந்தால் சரி.
அண்மையில் வெளிவந்த ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றியோரில் 90 வீதமானோர் சித்தியடையவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சித்தியடைந்த மாணவர்கள் பற்றி அதிகம் பேசப்பட்டாலும் சித்தியடையாத மாணவர்கள் அடையும் உளவியல் ரீதியான தாக்கம் குறித்து பேசப்படுவது மிக மிகக் குறைவு என்றே சொல்லலாம்.
புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியான மறுதினம் உளவளத் துணையாளர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருக்கையில் அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசியவர் ஒரு ஆசிரியர்.
தனது மகன் இம் முறை புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றியதாகவும் ஓரிரு புள்ளிகளால் சித்தியடையத் தவறிவிட்டதாகவும் பெறுபேறு வெளியானதிலிருந்து தனது மகனால் வாய் திறந்து பேச முடியாதிருப்பதாகவும் அழாக் குறையாகவும் பதற்றத்துடனும் குறிப்பிட்டார்.
தனது மகனை அதிர்ச்சியிலிருந்து எப்படி மீட்பது எனவும் அவர் குறித்த உளவளத் துணையாளரிடம் ஆலோசனை கேட்டார். அவருக்கு உரிய ஆலோசனைகளை வழங்கிய உளவளத் துணையாளர் ஒரு முக்கிய உண்மையையும் என்னோடு பகிர்ந்து கொண்டார்.
ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடையத் தவறும் பிள்ளைகளில் அதிகம் உளவியல் ரீதியான தாக்கத்திற்கு உட்படுவது ஆசியர்களின் பிள்ளைகளே என புதிய ஆய்வு ஒன்றில் தெரிய வந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தமது பிள்ளைகள் மீது ஆசிரியர்களான பெற்றோர்கள் அதிக அழுத்தங்களைப் பிரயோகிப்பதே இதற்குக் காரணம் என்றும் அவர் சொன்னார்.
ஆசிரியர்களுக்குப் புரிந்தால் சரி.
சித்தியடைந்த மாணவர்கள் பற்றி அதிகம் பேசப்பட்டாலும் சித்தியடையாத மாணவர்கள் அடையும் உளவியல் ரீதியான தாக்கம் குறித்து பேசப்படுவது மிக மிகக் குறைவு என்றே சொல்லலாம்.
புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியான மறுதினம் உளவளத் துணையாளர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருக்கையில் அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசியவர் ஒரு ஆசிரியர்.
தனது மகன் இம் முறை புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றியதாகவும் ஓரிரு புள்ளிகளால் சித்தியடையத் தவறிவிட்டதாகவும் பெறுபேறு வெளியானதிலிருந்து தனது மகனால் வாய் திறந்து பேச முடியாதிருப்பதாகவும் அழாக் குறையாகவும் பதற்றத்துடனும் குறிப்பிட்டார்.
தனது மகனை அதிர்ச்சியிலிருந்து எப்படி மீட்பது எனவும் அவர் குறித்த உளவளத் துணையாளரிடம் ஆலோசனை கேட்டார். அவருக்கு உரிய ஆலோசனைகளை வழங்கிய உளவளத் துணையாளர் ஒரு முக்கிய உண்மையையும் என்னோடு பகிர்ந்து கொண்டார்.
ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடையத் தவறும் பிள்ளைகளில் அதிகம் உளவியல் ரீதியான தாக்கத்திற்கு உட்படுவது ஆசியர்களின் பிள்ளைகளே என புதிய ஆய்வு ஒன்றில் தெரிய வந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தமது பிள்ளைகள் மீது ஆசிரியர்களான பெற்றோர்கள் அதிக அழுத்தங்களைப் பிரயோகிப்பதே இதற்குக் காரணம் என்றும் அவர் சொன்னார்.
ஆசிரியர்களுக்குப் புரிந்தால் சரி.
வேலியே பயிரை மேய்கிறது...
கடந்த வாரம் சவூதி அரேபியாவிலிருந்து நாடு திரும்பிய கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சகோதரர் ஒருவரைச் சந்தித்தேன்.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்புக்கு வரும் வழியில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.
சவூதியிலிருந்து இலங்கை திரும்பிய மேலும் சில பயணிகளுடன் குறித்த சகோதரரும் வேன் ஒன்றை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு கொழும்பு நோக்கிப் பயணித்துள்ளார். வரும் வழியில் களனி பாலத்துக்கு அருகில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் இவர்கள் பயணித்த வேன் மறிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்பதை அறிந்து கொண்ட பொலிசார் இவர்களது பைகளை தீவிரமாகச் சோதனையிட்டதுடன் அவற்றிலிருந்த பெறுமதிவாய்ந்த பொருட்களை சுருட்டத் தொடங்கியுள்ளனர். குறித்த சகோதரர் கொண்டு வந்த சுமார் 8 கையடக்கத் தொலைபேசிகளில் சிலவற்றையும் பொலிசார் பலவந்தமாகப் பெற்றுக் கொள்ள முயற்சித்துள்ளனர். அத்துடன் வேனில் இருந்தவர்கள் சகலரிடமிருந்தும் வெளிநாட்டு இனிப்புப் பண்டகளையும் வாசனைத் திரவியங்களையும் கூட அவர்களின் அனுமதியின்றியே பொலிசார் எடுத்துக் கொண்டுள்ளனர்.
தனது பொருட்களைத் தருமாறு கேட்டும் பொலிசார் தர மறுத்ததால் உடனடியாகவே `பொக்கற்'றிலிருந்த உயர் பொலிஸ் அதிகாரி ஒருவரின் புகைப்படத்தைக் காட்டி `இவர் எனது உறவினர்தான்...' எனக் கூறியுள்ளார் அவர். அதன் பின்னர்தான் `சொறி மாத்தையா' எனச் சொல்லி விட்டு கொஞ்சம் டொபிகளை மாத்திரம் எடுத்துக் கொண்டு வேனை விட்டார்களாம்... பாருங்கள்.... வேலியே பயிரை மேய்கிறது இந்த நாட்டில்....
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்புக்கு வரும் வழியில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.
சவூதியிலிருந்து இலங்கை திரும்பிய மேலும் சில பயணிகளுடன் குறித்த சகோதரரும் வேன் ஒன்றை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு கொழும்பு நோக்கிப் பயணித்துள்ளார். வரும் வழியில் களனி பாலத்துக்கு அருகில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் இவர்கள் பயணித்த வேன் மறிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்பதை அறிந்து கொண்ட பொலிசார் இவர்களது பைகளை தீவிரமாகச் சோதனையிட்டதுடன் அவற்றிலிருந்த பெறுமதிவாய்ந்த பொருட்களை சுருட்டத் தொடங்கியுள்ளனர். குறித்த சகோதரர் கொண்டு வந்த சுமார் 8 கையடக்கத் தொலைபேசிகளில் சிலவற்றையும் பொலிசார் பலவந்தமாகப் பெற்றுக் கொள்ள முயற்சித்துள்ளனர். அத்துடன் வேனில் இருந்தவர்கள் சகலரிடமிருந்தும் வெளிநாட்டு இனிப்புப் பண்டகளையும் வாசனைத் திரவியங்களையும் கூட அவர்களின் அனுமதியின்றியே பொலிசார் எடுத்துக் கொண்டுள்ளனர்.
தனது பொருட்களைத் தருமாறு கேட்டும் பொலிசார் தர மறுத்ததால் உடனடியாகவே `பொக்கற்'றிலிருந்த உயர் பொலிஸ் அதிகாரி ஒருவரின் புகைப்படத்தைக் காட்டி `இவர் எனது உறவினர்தான்...' எனக் கூறியுள்ளார் அவர். அதன் பின்னர்தான் `சொறி மாத்தையா' எனச் சொல்லி விட்டு கொஞ்சம் டொபிகளை மாத்திரம் எடுத்துக் கொண்டு வேனை விட்டார்களாம்... பாருங்கள்.... வேலியே பயிரை மேய்கிறது இந்த நாட்டில்....
Thursday, 30 September 2010
தொழுதுவிட்டுப் போயிருப்பான்...!
பாவக் கறைகளைப் போக்கிக் கொள்வதற்காகத்தான் நாம் பள்ளிவாசலுக்குச் செல்கிறோம். ஆனால் ஒரு சிலர் தம் மீது பாவக் கறைகளை அள்ளிப் பூசிக் கொள்ளவே பள்ளிவாசலுக்கு வருகிறார்கள் என்பதை நினைக்கையில் கவலையாகவிருக்கிறது.
கடந்த திங்கட் கிழமை கொழும்பிலுள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கு லுஹர் தொழுகைக்காகச் சென்றிருந்தேன். தொழுதுவிட்டு வெளியே வந்து பார்த்தபோது பெறுமதி வாய்ந்த எனது காலணிகளைக் காணவில்லை.
பள்ளிவாசல் சிற்றூழியரிடம் சென்று முறையிட்டேன். `அதெல்லாம் சகஜமப்பா' என்ற பாணியில் கையை விரிக்க மாத்திரம்தான் அவரால் முடிந்தது.
"சில தினங்களுக்கு முன்னரும் இரண்டு சோடி காலணிகள் காணாமல் போய்விட்டன தம்பி. இது தொடர்ந்து நடக்கிறது" என்றார் அவர். அங்கு கூடி நின்றவர்களும் ஆளைப் பிடித்து `சாத்த' வேண்டும் என்றார்கள்.
ஆனால் எனக்கு மாத்திரம் அந்த இடத்தில் கோபம் வருவதற்கு பதிலாக ஒரு கவிதைதான் வந்தது.
"பள்ளிக்குத் தொழச் சென்றேன்.
செருப்பைக் காணவில்லை.
தொழ வந்தவர்கள்
திருடியிருப்பார்கள்...!
இல்லை... இல்லை...
திருட வந்தவன்
தொழுதுவிட்டுப் போயிருப்பான்...!!"
எங்கேயோ எப்போதோ படித்த இந்தக் கவிதை எனக்குள் இப்போதும் பத்திரமாய் பதிந்திருக்கிறது... என் செருப்பும் திருட்டுப் போகும்வரை...
(இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ள படத்தைப் பார்த்தால் என்ன தெரிகிறது....? இது ஒன்றும் செருப்பு விற்கும் கடையில்லை... தென்கொரியாவில் பார்க் எனும் 59 வயது செருப்புத் திருடனால் வீடுகளிலும் மத தலங்களிலும் ஹோட்டல்களிலும் திருடப்பட்ட 1700 சோடி செருப்புகள்தான் இவை... அப்பாடா...இதை விட நம்ம நாட்டு திருடர்கள் பரவாயில்லை போலும்...?)
கடந்த திங்கட் கிழமை கொழும்பிலுள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கு லுஹர் தொழுகைக்காகச் சென்றிருந்தேன். தொழுதுவிட்டு வெளியே வந்து பார்த்தபோது பெறுமதி வாய்ந்த எனது காலணிகளைக் காணவில்லை.
பள்ளிவாசல் சிற்றூழியரிடம் சென்று முறையிட்டேன். `அதெல்லாம் சகஜமப்பா' என்ற பாணியில் கையை விரிக்க மாத்திரம்தான் அவரால் முடிந்தது.
"சில தினங்களுக்கு முன்னரும் இரண்டு சோடி காலணிகள் காணாமல் போய்விட்டன தம்பி. இது தொடர்ந்து நடக்கிறது" என்றார் அவர். அங்கு கூடி நின்றவர்களும் ஆளைப் பிடித்து `சாத்த' வேண்டும் என்றார்கள்.
ஆனால் எனக்கு மாத்திரம் அந்த இடத்தில் கோபம் வருவதற்கு பதிலாக ஒரு கவிதைதான் வந்தது.
"பள்ளிக்குத் தொழச் சென்றேன்.
செருப்பைக் காணவில்லை.
தொழ வந்தவர்கள்
திருடியிருப்பார்கள்...!
இல்லை... இல்லை...
திருட வந்தவன்
தொழுதுவிட்டுப் போயிருப்பான்...!!"
எங்கேயோ எப்போதோ படித்த இந்தக் கவிதை எனக்குள் இப்போதும் பத்திரமாய் பதிந்திருக்கிறது... என் செருப்பும் திருட்டுப் போகும்வரை...
(இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ள படத்தைப் பார்த்தால் என்ன தெரிகிறது....? இது ஒன்றும் செருப்பு விற்கும் கடையில்லை... தென்கொரியாவில் பார்க் எனும் 59 வயது செருப்புத் திருடனால் வீடுகளிலும் மத தலங்களிலும் ஹோட்டல்களிலும் திருடப்பட்ட 1700 சோடி செருப்புகள்தான் இவை... அப்பாடா...இதை விட நம்ம நாட்டு திருடர்கள் பரவாயில்லை போலும்...?)
Thursday, 23 September 2010
பிழைக்கத் தெரிந்தவர்கள்
டுபாய் நாட்டில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருக்கும் ஆசிய நாட்டு பிச்சைக்காரர் ஒருவரைப் பற்றி சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்கள் வாயிலாகக் கேள்விப்பட்டு ஆச்சரியப்பட்டிருப்பீர்கள்.
உலகில் இன்று மிக இலகுவாகப் பணம் சம்பாதிக்கின்ற துறையாக பிச்சைத் தொழில் மாறிவிட்டது என்பதற்கு இந்த டுபாய் பிச்சைக்காரர் நல்ல உதாரணம்தான்.
ஆனால் அதைவிடவும் நம் கண் முன்னாலேயே பிச்சையெடுத்து மிகக் குறுகிய நேரத்திற்குள்ளேயே ஆயிரக் கணக்கான ரூபாய்களை "சம்பாதிக்கும்' பலரை கொழும்பிலும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் நீங்கள் கண்டிருக்கக் கூடும்.
சில வாரங்களுக்கு முன்னர் கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கிச் சென்ற பஸ் வண்டி ஒன்றில் நானும் பயணித்தேன்.
சனநெரிசல்மிக்க குறித்த பஸ் வண்டி வெள்ளவத்தையை அண்மித்ததும் சிறிது கால் ஊனமுற்ற சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஏறி பயணிகளைக் கும்பிட்டவாறே பிச்சையெடுக்கத் தொடங்கினார்.
தனது இயலாமையைச் சொல்லி அழாக் குறையாக பிச்சையெடுத்த அவரை நடத்துனர் இறங்கிச் சென்றுவிடுமாறு பல தடவை எச்சரித்தபோதிலும் அவர் அதனை சற்றும் பொருட்படுத்தவில்லை.
தனது சம்பாத்தியத்திலேயே குறியாக இருந்த அவர் பஸ் வண்டி தெஹிவளையைத் தாண்டுவதற்கு முன்பதாகவே (10 நிமிடங்களை விடக் குறைவான நேரம்தான்) மொத்தமாக சுமார் 400 ரூபாய்களை சம்பாதித்து விட்டார். அப்படியானால் அவரது முழு நாள் 'சம்பாத்தியம்'?
இன்றைய பொருளாதார நெருக்கடிமிக்க காலத்தில் நானறிந்த வகையில் எந்த முதலீடுகளுமின்றி இலங்கையில் 10 நிமிடத்திற்குள் இவ்வளவு தொகையை சம்பாதிக்க முடியுமென்றால் அது நிச்சயம் இந்தப் பிச்சைத் தொழிலில் மாத்திரம்தான்.
என்ன? செய்யும் தொழிலை விட்டுவிட்டு பிச்சையெடுக்கலாம் போல எண்ணத் தோணுகிறதா?
23.09.2010
Friday, 17 September 2010
'இயக்க வெறி'
ரமழான் மாதத்தின் இறுதிப் பத்தில் மேற்கொள்ளப்படும் மிக முக்கியமான அமல்களில் ஒன்றாக இஃதிகாப் கருதப்படுகிறது.
நமது நாட்டிலுள்ள பெரும்பாலான பள்ளிவாசல்களில் இஃதிகாப் இருப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதும் ஏராளமானோர் இவ் அமலில் ஈடுபாட்டுடன் கலந்து கொள்வதும் வழமை.
இந்த வருடம் ரமழானின் இறுதிப் பத்தில் கொழும்பிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் இஃதிகாப் இருந்த சில சகோதரர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் கவலைக்குரியது மட்டுமல்ல நாமனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டியதுமாகும்.
குறித்த பள்ளிவாசலில் இஸ்லாமிய இயக்கம் ஒன்றைச் சேர்ந்த சுமார் 15 சகோதரர்கள் இம் முறை இஃதிகாப் அமலில் ஈடுபட்டிருந்தனர்.
சரியாக நோன்பு 28 அன்று நண்பகல் இப் பள்ளிவாசலுக்கு வந்த இன்னுமொரு இஸ்லாமிய இயக்கத்தைச் சேர்ந்த சிலர் இஃதிகாப் இருந்த சகோதரர்களை அங்கிருந்து வெளியேறுமாறு கோரியதுடன் அவர்களைத் தாக்குவதற்கும் முற்பட்டுள்ளனர்.
இவ் விவகாரம் பொலிஸ் நிலையம் வரை செல்ல பிரச்சினையைப் பெரிதுபடுத்த விரும்பாத இஃதிகாப் இருந்த சகோதரர்கள் அங்கிருந்து வெளியேறி தமது வீடுகளுக்குச் சென்றுவிட்டனர். ஆசையோடு செய்த அமலை பூர்த்தி செய்ய முடியவில்லையே என்ற கவலை இன்றும் அவர்களை ஆட்கொண்டுள்ளது.
"இயக்க வெறி' பிடித்து அலையும் இவர்கள் தமது இயக்கத்தை வளர்க்கிறார்களோ இல்லையோ இஸ்லாத்தை அழிக்கிறார்கள் என்பது மட்டும் உண்மையிலும் உண்மை.
16.09.2010
இப்தார்
ரமழான் மாதம் வந்துவிட்டால் "இப்தார்' நிகழ்வுகளுக்குப் பஞ்சமிருக்காது.
முஸ்லிம்கள் மட்டுமன்றி முஸ்லிமல்லாதவர்கள் கூட தமது அன்பையும் நல்லெண்ணத்தையும் வெளிப்படுத்துவதற்காக இப்தார் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது வழக்கம்.
கடந்த வாரம் இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வுக்கு வருமாறு அழைப்பு வந்திருந்தது.
ஏதாவது ஒரு ஆடம்பர ஹோட்டலில் நடக்கும் என்ற எதிர்பார்ப்போடுதான் அழைப்பைப் பிரித்தேன்.
ஆச்சரியமாகவிருந்தது. திம்பிரிகஸ்யாயவிலுள்ள அனாதைப் பெண் பிள்ளைகள் தங்கியிருக்கும் பாத்திமா நலன்புரி நிலையத்தில்தான் குறித்த இப்தார் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஊடகவியலாளர்களைத் தவிர வேறு எந்த அரசியல் பிரமுகர்களோ, முக்கயஸ்தர்களோ இதற்கு அழைக்கப்பட்டிருக்கவில்லை.
அந்த நலன்புரி நிலையத்தில் தங்கியிருக்கும் பெண் பிள்ளைகளின் அன்றைய தினத்திற்கான உணவுச் செலவையும் அமெரிக்க தூதரகமே பொறுப்பேற்றிருந்தது.
அமெரிக்க தூதுவரும் நோன்பு பற்றியும் அங்கு தங்கியிருக்கும் பிள்ளைகளின் குறை நிறைகள் பற்றியும் ஆர்வத்துடன் கேட்டறிந்து கொண்டார்.
கடந்த வாரம் கொழும்பில் மற்றுமொரு இப்தார் நடந்தது. இரண்டு முஸ்லிம் பெரியார்களின் பெயரால் நடத்தப்பட்ட அந்த இப்தாருக்கான மொத்த செலவு எவ்வளவு தெரியுமா?
18 இலட்சங்கள்!!!
அவர்கள் எங்கே?
நம்மவர்கள் எங்கே?
09.09.2010
முஸ்லிம்கள் மட்டுமன்றி முஸ்லிமல்லாதவர்கள் கூட தமது அன்பையும் நல்லெண்ணத்தையும் வெளிப்படுத்துவதற்காக இப்தார் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது வழக்கம்.
கடந்த வாரம் இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வுக்கு வருமாறு அழைப்பு வந்திருந்தது.
ஏதாவது ஒரு ஆடம்பர ஹோட்டலில் நடக்கும் என்ற எதிர்பார்ப்போடுதான் அழைப்பைப் பிரித்தேன்.
ஆச்சரியமாகவிருந்தது. திம்பிரிகஸ்யாயவிலுள்ள அனாதைப் பெண் பிள்ளைகள் தங்கியிருக்கும் பாத்திமா நலன்புரி நிலையத்தில்தான் குறித்த இப்தார் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஊடகவியலாளர்களைத் தவிர வேறு எந்த அரசியல் பிரமுகர்களோ, முக்கயஸ்தர்களோ இதற்கு அழைக்கப்பட்டிருக்கவில்லை.
அந்த நலன்புரி நிலையத்தில் தங்கியிருக்கும் பெண் பிள்ளைகளின் அன்றைய தினத்திற்கான உணவுச் செலவையும் அமெரிக்க தூதரகமே பொறுப்பேற்றிருந்தது.
அமெரிக்க தூதுவரும் நோன்பு பற்றியும் அங்கு தங்கியிருக்கும் பிள்ளைகளின் குறை நிறைகள் பற்றியும் ஆர்வத்துடன் கேட்டறிந்து கொண்டார்.
கடந்த வாரம் கொழும்பில் மற்றுமொரு இப்தார் நடந்தது. இரண்டு முஸ்லிம் பெரியார்களின் பெயரால் நடத்தப்பட்ட அந்த இப்தாருக்கான மொத்த செலவு எவ்வளவு தெரியுமா?
18 இலட்சங்கள்!!!
அவர்கள் எங்கே?
நம்மவர்கள் எங்கே?
09.09.2010
ஜும்ஆ நடத்தலாமே...?
நோன்பு காலம் வந்துவிட்டால் முஸ்லிம் சிறைக் கைதிகள் மீதான அக்கறை பலருக்கும் வந்துவிடுவது என்னவோ உண்மைதான்.
"முஸ்லிம் கைதிகள் நோன்பு நோற்க ஏற்பாடு', "முஸ்லிம் கைதிகளுக்கு உலருணவுப் பொருட்கள் விநியோகம்', "முஸ்லிம் கைதிகள் தொழுகையில் ஈடுபட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன'.... என்றெல்லாம் பத்திரிகைச் செய்திகள் கூட அதிகம் வெளிவரும்.
சில தினங்களுக்கு முன்னர் சந்தித்த ஊடக நண்பர் ஒருவர் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டார்.
தென் மாகாணத்தைச் சேர்ந்த சிறைச்சாலை ஒன்றிலுள்ள முஸ்லிம் கைதிகளுக்கு நோன்பை முன்னிட்டு உலருணவுப் பொருட்களை வழங்க ஒரு நிறுவனத்துடன் இணைந்து தானும் சில தினங்கள் சென்றதாகக் குறிப்பிட்ட அவர், குறித்த சிறைச்சாலையின் பொறுப்பதிகாரி தெரிவித்த கருத்தைச் சொன்ன போது கவலையாக இருந்தது.
"இப்பொழுது இந்தச் சிறையில் வெள்ளிக் கிழமை (ஜும்ஆ) தொழுகை நடத்தக் கூடிய அளவுக்கு முஸ்லிம் கைதிகள் இருக்கிறார்கள். வேண்டுமானால் தொழுகைக்கு ஏற்பாடு செய்யுங்கள்'' என்பதுதான் அந்த சிறை அதிகாரியின் கூற்று.
முஸ்லிம்கள் மத்தியில் அதிகரித்துச் செல்லும் குற்றச் செயல்களுக்கு இந்த அதிகாரியின் கூற்றும் நல்ல உதாரணம்தானே?
02.09.2010
"முஸ்லிம் கைதிகள் நோன்பு நோற்க ஏற்பாடு', "முஸ்லிம் கைதிகளுக்கு உலருணவுப் பொருட்கள் விநியோகம்', "முஸ்லிம் கைதிகள் தொழுகையில் ஈடுபட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன'.... என்றெல்லாம் பத்திரிகைச் செய்திகள் கூட அதிகம் வெளிவரும்.
சில தினங்களுக்கு முன்னர் சந்தித்த ஊடக நண்பர் ஒருவர் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டார்.
தென் மாகாணத்தைச் சேர்ந்த சிறைச்சாலை ஒன்றிலுள்ள முஸ்லிம் கைதிகளுக்கு நோன்பை முன்னிட்டு உலருணவுப் பொருட்களை வழங்க ஒரு நிறுவனத்துடன் இணைந்து தானும் சில தினங்கள் சென்றதாகக் குறிப்பிட்ட அவர், குறித்த சிறைச்சாலையின் பொறுப்பதிகாரி தெரிவித்த கருத்தைச் சொன்ன போது கவலையாக இருந்தது.
"இப்பொழுது இந்தச் சிறையில் வெள்ளிக் கிழமை (ஜும்ஆ) தொழுகை நடத்தக் கூடிய அளவுக்கு முஸ்லிம் கைதிகள் இருக்கிறார்கள். வேண்டுமானால் தொழுகைக்கு ஏற்பாடு செய்யுங்கள்'' என்பதுதான் அந்த சிறை அதிகாரியின் கூற்று.
முஸ்லிம்கள் மத்தியில் அதிகரித்துச் செல்லும் குற்றச் செயல்களுக்கு இந்த அதிகாரியின் கூற்றும் நல்ல உதாரணம்தானே?
02.09.2010
அக்கறைசாலிகள்
கடந்த வாரம் கொழும்பு மாவட்ட முஸ்லிம்களின் கல்வி நிலை தொடர்பான கலந்துரையாடல் ஒன்றுக்குச் சென்றிருந்தேன்.
முஸ்லிம் தனவந்தர் ஒருவர் ஏற்பாடு செய்திருந்த இக் கலந்துரையாடலில் பலரும் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.குறித்த கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்த தனவந்தர் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் ஒன்றை அங்கு கூடியிருந்தவர்களோடு பகிர்ந்து கொண்டார்.
கொழும்பு மாவட்டத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் முஸ்லிம் மாணவர்களுக்கு புலமைப் பரிசில்களை வழங்கும் நோக்கில் தான் ஒரு முஸ்லிம் பாடசாலை அதிபரை அணுகியதாகவும் ஆனால் அதற்கு குறித்த அதிபர் அளித்த பதில் தன்னை கவலையடையச் செய்ததாகவும் குறிப்பிட்டார்.
"" நீங்கள் ஏன் இப்படி ஒரு சிலருக்கு மாத்திரம் இரகசியமாக புலமைப்பரிசில் வழங்க வேண்டும்? 5000 பிள்ளைகளுக்கு 5 கொப்பிகள் வீதம் பகிரங்கமாக வழங்கினால் நீங்கள் "பப்ளிசிட்டி' ஆகலாம்தானே?'' என்பதுதான் அந்த "அதிபர்' அளித்த பதில்.
இப்படிப்பட்ட அக்கறைசாலிகளை வைத்துக் கொண் டா முஸ்லிம் சமூகத்தின் கல்வியை அபிவிருத்தி செய்வது?
26.08.2010
முஸ்லிம் தனவந்தர் ஒருவர் ஏற்பாடு செய்திருந்த இக் கலந்துரையாடலில் பலரும் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.குறித்த கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்த தனவந்தர் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் ஒன்றை அங்கு கூடியிருந்தவர்களோடு பகிர்ந்து கொண்டார்.
கொழும்பு மாவட்டத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் முஸ்லிம் மாணவர்களுக்கு புலமைப் பரிசில்களை வழங்கும் நோக்கில் தான் ஒரு முஸ்லிம் பாடசாலை அதிபரை அணுகியதாகவும் ஆனால் அதற்கு குறித்த அதிபர் அளித்த பதில் தன்னை கவலையடையச் செய்ததாகவும் குறிப்பிட்டார்.
"" நீங்கள் ஏன் இப்படி ஒரு சிலருக்கு மாத்திரம் இரகசியமாக புலமைப்பரிசில் வழங்க வேண்டும்? 5000 பிள்ளைகளுக்கு 5 கொப்பிகள் வீதம் பகிரங்கமாக வழங்கினால் நீங்கள் "பப்ளிசிட்டி' ஆகலாம்தானே?'' என்பதுதான் அந்த "அதிபர்' அளித்த பதில்.
இப்படிப்பட்ட அக்கறைசாலிகளை வைத்துக் கொண் டா முஸ்லிம் சமூகத்தின் கல்வியை அபிவிருத்தி செய்வது?
26.08.2010
பக்தி
ரமழான் மாதம் வந்தவுடன் நம்மில் அதிகமானோர் "ஷைத்தான் பெட்டி'' என்றழைக்கப்படும் தொலைக் காட்சிப் பெட்டிகளை மூட்டை கட்டி வைத்து விடுவது என்னவோ உண்மைதான். அதற்கப்பால் சிலர் தாம் பயன்படுத்தும் கேபிள் தொலைக்காட்சி சேவைகளையும் ஒரு மாத காலத்திற்கு துண்டித்துவிடுவார்கள்.
இம் முறை ரமழான் ஆரம்பித்தது முதல் இலங்கையில் கேபிள் தொலைக்காட்சி சேவைகளை வழங்கும் நிறுவனம் ஒன்று பின்வருமாறு விளம்பரம் ஒன்றை தொடராக ஒளிபரப்பியது.
" புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு கேபிள் தொலைக்காட்சி சேவைகளைத் துண்டிப்பவர்கள் மீண்டும் தொடர்பினை ஏற்படுத்த 500 ரூபாய் சேவைக் கட்டணமாக அறவிடப்படும்'' என்பதுதான் அந்த விளம்பரம்.
ரமழானில் மாத்திரம்தான் முஸ்லிம்கள் தொலைக்காட்சி பார்க்க மாட்டார்கள். ரமழான் முடிந்ததும் மீண்டும் "ஷைத்தான் பெட்டி'யைத் திறந்து 11 மாதமும் சின்னத் திரைக்குள்ளும் சினிமாவுக்குள்ளும் மூழ்கி விடுவார்கள் என்பதை தொலைக்காட்சி நிறுவன ங்கள் நன்கு புரிந்து வைத்திருப்பதன் வெளிப்பாடுதானே இந்த விளம்பரம்?
19.08.2010
இம் முறை ரமழான் ஆரம்பித்தது முதல் இலங்கையில் கேபிள் தொலைக்காட்சி சேவைகளை வழங்கும் நிறுவனம் ஒன்று பின்வருமாறு விளம்பரம் ஒன்றை தொடராக ஒளிபரப்பியது.
" புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு கேபிள் தொலைக்காட்சி சேவைகளைத் துண்டிப்பவர்கள் மீண்டும் தொடர்பினை ஏற்படுத்த 500 ரூபாய் சேவைக் கட்டணமாக அறவிடப்படும்'' என்பதுதான் அந்த விளம்பரம்.
ரமழானில் மாத்திரம்தான் முஸ்லிம்கள் தொலைக்காட்சி பார்க்க மாட்டார்கள். ரமழான் முடிந்ததும் மீண்டும் "ஷைத்தான் பெட்டி'யைத் திறந்து 11 மாதமும் சின்னத் திரைக்குள்ளும் சினிமாவுக்குள்ளும் மூழ்கி விடுவார்கள் என்பதை தொலைக்காட்சி நிறுவன ங்கள் நன்கு புரிந்து வைத்திருப்பதன் வெளிப்பாடுதானே இந்த விளம்பரம்?
19.08.2010
கதை அளத்தல்
கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றுக்குச் சென்றிருந்தேன்.
குறித்த நிகழ்வு இரவு 7 மணிக்கு ஆரம்பமாகும் என அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தபோதிலும் 8 மணிக்கே ஆரம்பமாகியது. நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த அமைப்பின் செயலாளர் ஆற்றிய அறிமுக உரை மாத்திரம் சரியாக 50 நிமிடங்களுக்கு நீண்டது. தொடர்ந்து வந்த அமைப்பின் பொருளாளரோ அங்கு வந்திருந்த முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு அரை மணி நேரமாக "அறிவுரை' வழங்கினார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவரும் தன்பாட்டுக்கு நேரத்தை நீட்டிக் கொண்டே சென்றார். அதன் பின்னர் அதிதி உரை, பாராட்டைப் பெற்றவரின் ஏற்புரை.... என தொடர்ந்து ஈற்றில் பங்குபற்றுனர்களின் கருத்துக்கும் இடம்வழங்கப்பட அதனைப் பயன்படுத்தி ஒரு அரசியல்வாதியும் எழுந்துநின்று தன்பாட்டுக்கு அளக்கத் தொடங்கினார்.
மொத்தத்தில் இரவு 10.30 மணிக்குத்தான் நிகழ்வு "இனிதே' நிறைவுபெற்றது. நம்மவர்களுக்கு "மைக்' மாத்திரம் கிடைத்துவிட்டால் போதும்; காலம் நேரம் புரியாமல் கதை அளக்கத் தொடங்கிவிடுவார்கள்.
உலகில் பிரபல்யம்பெற்ற மனிதர்கள் கலந்து கொண்டு உரையாற்றும் நிகழ்வு ஒன்று வாராந்தம் அமெரிக்காவில் நடக்கிறது.
சரியாக 20 நிமிடங்களுக்குள் மாத்திரம் தாங்கள் சொல்ல வரும் செய்தியை மிகக் கச்சிதாகச் சொல்லிவிடுகிறார்கள் அவர்கள்.
வேண்டுமானால் www.ted.com எனும் தளத்துக்கு ஒரு முறை விஜயம் செய்து பாருங்கள்...
12.08.2010
குறித்த நிகழ்வு இரவு 7 மணிக்கு ஆரம்பமாகும் என அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தபோதிலும் 8 மணிக்கே ஆரம்பமாகியது. நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த அமைப்பின் செயலாளர் ஆற்றிய அறிமுக உரை மாத்திரம் சரியாக 50 நிமிடங்களுக்கு நீண்டது. தொடர்ந்து வந்த அமைப்பின் பொருளாளரோ அங்கு வந்திருந்த முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு அரை மணி நேரமாக "அறிவுரை' வழங்கினார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவரும் தன்பாட்டுக்கு நேரத்தை நீட்டிக் கொண்டே சென்றார். அதன் பின்னர் அதிதி உரை, பாராட்டைப் பெற்றவரின் ஏற்புரை.... என தொடர்ந்து ஈற்றில் பங்குபற்றுனர்களின் கருத்துக்கும் இடம்வழங்கப்பட அதனைப் பயன்படுத்தி ஒரு அரசியல்வாதியும் எழுந்துநின்று தன்பாட்டுக்கு அளக்கத் தொடங்கினார்.
மொத்தத்தில் இரவு 10.30 மணிக்குத்தான் நிகழ்வு "இனிதே' நிறைவுபெற்றது. நம்மவர்களுக்கு "மைக்' மாத்திரம் கிடைத்துவிட்டால் போதும்; காலம் நேரம் புரியாமல் கதை அளக்கத் தொடங்கிவிடுவார்கள்.
உலகில் பிரபல்யம்பெற்ற மனிதர்கள் கலந்து கொண்டு உரையாற்றும் நிகழ்வு ஒன்று வாராந்தம் அமெரிக்காவில் நடக்கிறது.
சரியாக 20 நிமிடங்களுக்குள் மாத்திரம் தாங்கள் சொல்ல வரும் செய்தியை மிகக் கச்சிதாகச் சொல்லிவிடுகிறார்கள் அவர்கள்.
வேண்டுமானால் www.ted.com எனும் தளத்துக்கு ஒரு முறை விஜயம் செய்து பாருங்கள்...
12.08.2010
Subscribe to:
Posts (Atom)










.jpg)








