ரமழான் மாதம் வந்தவுடன் நம்மில் அதிகமானோர் "ஷைத்தான் பெட்டி'' என்றழைக்கப்படும் தொலைக் காட்சிப் பெட்டிகளை மூட்டை கட்டி வைத்து விடுவது என்னவோ உண்மைதான். அதற்கப்பால் சிலர் தாம் பயன்படுத்தும் கேபிள் தொலைக்காட்சி சேவைகளையும் ஒரு மாத காலத்திற்கு துண்டித்துவிடுவார்கள்.
இம் முறை ரமழான் ஆரம்பித்தது முதல் இலங்கையில் கேபிள் தொலைக்காட்சி சேவைகளை வழங்கும் நிறுவனம் ஒன்று பின்வருமாறு விளம்பரம் ஒன்றை தொடராக ஒளிபரப்பியது.
" புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு கேபிள் தொலைக்காட்சி சேவைகளைத் துண்டிப்பவர்கள் மீண்டும் தொடர்பினை ஏற்படுத்த 500 ரூபாய் சேவைக் கட்டணமாக அறவிடப்படும்'' என்பதுதான் அந்த விளம்பரம்.
ரமழானில் மாத்திரம்தான் முஸ்லிம்கள் தொலைக்காட்சி பார்க்க மாட்டார்கள். ரமழான் முடிந்ததும் மீண்டும் "ஷைத்தான் பெட்டி'யைத் திறந்து 11 மாதமும் சின்னத் திரைக்குள்ளும் சினிமாவுக்குள்ளும் மூழ்கி விடுவார்கள் என்பதை தொலைக்காட்சி நிறுவன ங்கள் நன்கு புரிந்து வைத்திருப்பதன் வெளிப்பாடுதானே இந்த விளம்பரம்?
19.08.2010

fantastic Fairoos! I read all your creations. Its very interesting and thought provoking. You have brought out the serious issues to the attention of the people in a simple manner. I like this style of writing.
ReplyDeleteFor this I dont know why you have put "Bakthi"! If it is me I will put as "Palaheenamaana manangalaal manapangappadum mathak kolhaihal" I don't know weather its too long, anyway keep writing. Brong out the rural issues also to the city.