Sunday, 6 February 2011
இப்படியும் ஒரு சகோதரி....
கொழும்பில் வசிக்கும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த எனக்குத் தெரிந்த சகோதரி ஒருவர் நேற்று முன்தினம் தொடர்பு கொண்டார்.
கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தினால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரண உதவிகளைப் பெற்றுக் கொடுப்பதில் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்யப் போவதாகவும் அதற்காக பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களைப் பெற்றுத் தருமாறும் என்னை வேண்டிக் கொண்டார்.
அன்றிரவே நான் குறித்த விபரங்களைப் பெற்றுக் கொடுத்தேன். அடுத்த நாள் அவற்றைக் கொண்டு கொழு ம்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றுக்கும் வசதி படைத்த தனது அயலவர்களின் வீடுகளுக்கும் சென்று விபரத்தைக் கூறி நிவாரண உதவிகளைக் கோரியிருக்கிறார். அவர்களும் மனமுவந்து பல உதவிகளைச் செய்திருக்கிறார்கள்.
`நிவாரணம் சேர்க்கத்தான் பொது நிறுவனங்கள் இருக்கின்றனவே? நாம் நமது வேலையைப் பார்ப்போம்' என்றிராமல் தன்னால் இயன்ற உதவிகளையும் பாதிக்கப்பட்ட மக்களுக்காகச் செய்ய வேண்டும் என்று துணிவுடன் களமிறங்கியிருக்கும் அந்த சகோதரிக்கு எனது வாழ்த்துக்கள்.
Subscribe to:
Posts (Atom)
