Friday, 17 September 2010

ஜும்ஆ நடத்தலாமே...?

நோன்பு காலம் வந்துவிட்டால் முஸ்லிம் சிறைக் கைதிகள் மீதான அக்கறை பலருக்கும் வந்துவிடுவது என்னவோ உண்மைதான்.

"முஸ்லிம் கைதிகள் நோன்பு நோற்க ஏற்பாடு', "முஸ்லிம் கைதிகளுக்கு உலருணவுப் பொருட்கள் விநியோகம்', "முஸ்லிம் கைதிகள் தொழுகையில் ஈடுபட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன'.... என்றெல்லாம் பத்திரிகைச் செய்திகள் கூட அதிகம் வெளிவரும்.

 சில தினங்களுக்கு முன்னர் சந்தித்த ஊடக நண்பர் ஒருவர் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டார்.

தென் மாகாணத்தைச் சேர்ந்த சிறைச்சாலை ஒன்றிலுள்ள முஸ்லிம் கைதிகளுக்கு நோன்பை முன்னிட்டு உலருணவுப் பொருட்களை வழங்க ஒரு நிறுவனத்துடன் இணைந்து தானும் சில தினங்கள் சென்றதாகக் குறிப்பிட்ட அவர், குறித்த சிறைச்சாலையின் பொறுப்பதிகாரி தெரிவித்த கருத்தைச் சொன்ன போது கவலையாக இருந்தது.

"இப்பொழுது இந்தச் சிறையில் வெள்ளிக் கிழமை (ஜும்ஆ) தொழுகை நடத்தக் கூடிய அளவுக்கு முஸ்லிம் கைதிகள் இருக்கிறார்கள். வேண்டுமானால் தொழுகைக்கு ஏற்பாடு செய்யுங்கள்'' என்பதுதான் அந்த சிறை அதிகாரியின் கூற்று.

முஸ்லிம்கள் மத்தியில் அதிகரித்துச் செல்லும் குற்றச் செயல்களுக்கு இந்த அதிகாரியின் கூற்றும் நல்ல உதாரணம்தானே?    

02.09.2010

No comments:

Post a Comment