கடந்த வாரம் கொழும்பு மாவட்ட முஸ்லிம்களின் கல்வி நிலை தொடர்பான கலந்துரையாடல் ஒன்றுக்குச் சென்றிருந்தேன்.
முஸ்லிம் தனவந்தர் ஒருவர் ஏற்பாடு செய்திருந்த இக் கலந்துரையாடலில் பலரும் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.குறித்த கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்த தனவந்தர் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் ஒன்றை அங்கு கூடியிருந்தவர்களோடு பகிர்ந்து கொண்டார்.
கொழும்பு மாவட்டத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் முஸ்லிம் மாணவர்களுக்கு புலமைப் பரிசில்களை வழங்கும் நோக்கில் தான் ஒரு முஸ்லிம் பாடசாலை அதிபரை அணுகியதாகவும் ஆனால் அதற்கு குறித்த அதிபர் அளித்த பதில் தன்னை கவலையடையச் செய்ததாகவும் குறிப்பிட்டார்.
"" நீங்கள் ஏன் இப்படி ஒரு சிலருக்கு மாத்திரம் இரகசியமாக புலமைப்பரிசில் வழங்க வேண்டும்? 5000 பிள்ளைகளுக்கு 5 கொப்பிகள் வீதம் பகிரங்கமாக வழங்கினால் நீங்கள் "பப்ளிசிட்டி' ஆகலாம்தானே?'' என்பதுதான் அந்த "அதிபர்' அளித்த பதில்.
இப்படிப்பட்ட அக்கறைசாலிகளை வைத்துக் கொண் டா முஸ்லிம் சமூகத்தின் கல்வியை அபிவிருத்தி செய்வது?
26.08.2010

No comments:
Post a Comment