Thursday, 2 December 2010

இப்படியும் ஓர் இபாதத்


 சென்ற வாரத்துக்கு முந்திய வாரம் `ரீலோட் இலஞ்சம்'  பற்றி எழுதியிருந்தேன்.

இந்த வாரம் புனித மக்கா நகரிலேயே இலஞ்சம் கொடுத்து ஹஜ் செய்த நமமவர்களைப் பற்றிய ஒரு சம்பவத்தை உங்களிடம் சொல்ல நினைக்கிறேன்.

கடந்த வெள்ளிக் கிழமை கொழும்பில் இடம்பெற்ற குத்பா பிரசங்கம் ஒன்றில்தான் இந்த சம்பவத்தை இமாமவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

இலட்சக் கணக்கான யாத்திரிகர்கள் மத்தியில்  தாமும் முண்டியடித்துக் கொண்டு தமது கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என நினைப்பதில் தவறில்லை. ஆனால் நமது நாட்டைச் சேர்ந்த சில யாத்திரிகர்களோ கடமைகளின் போது முன்வரிசையில் இடம்பிடிப்பதற்காக அங்குள்ள ஏற்பாட்டாளர்களுக்கு இலஞ்சம் கொடுத்துவிட்டு வேறு நாட்டு யாத்திரிகர்களுக்குச் சொந்தமான வாகனங்களில் ஏறிச் சென்று முன்னணியில் இடம்பிடித்துக் கொண்டார்களாம்.

நமது நாட்டின் பெருமையை அந்தப் புனித மண்ணிலும் நிலைநாட்டிய பெருமை இந்த `ஹாஜி'களைத்தான் சாரும் அல்லவா?

No comments:

Post a Comment