Thursday, 16 December 2010

திருட்டுத்தனம்


அண்மையில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த சகோதரர் ஒருவரை எதேச்சையாகச் சந்திக்கக் கிடைத்தது. ஒரு வெளியீட்டகத்தை நடத்தி வருபவர் அவர். 

அவர் என்னிடம் சொன்ன பின்வரும் விடயம் எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் ஆச்சரியம் தரக் கூடியது.

"நான் இந்தியாவைச் சேர்ந்த பிரபல இஸ்லாமிய பிரசாரகர் ஒருவரின் ஆங்கில மொழி மூல உரைகளடங்களிய இறுவட்டுக்களை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டு வருகிறேன். நான்தான் அதற்கு குரலும் கொடுக்கிறேன். இதனை குறித்த பிரசாரகரின் அனுமதியுடன்தான் நாம் செய்கிறோம்.

அண்மையில் நாங்கள் வெளியிட்ட ஒரு தமிழ் மொழி மூல இறுவட்டை இலங்கையிலுள்ள ஒரு தஃவா பிரசார அமைப்பினர் எமது நிறுவனத்தின் பெயரை அழித்து விட்டு அவர்களது பெயரைப் பொறித்து இலங்கை முழுவதும் விற்பனை செய்திருக்கிறார்கள். ஒரு இலங்கை நண்பரின் வீட்டில் குறித்த இறுவட்டு ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தபோதுதான் என்னால் இந்தத் `திருட்டுத்தனத்தை' கண்டுபிடிக்க முடிந்தது."

தஃவா செய்யத்தான் வேண்டும். ஆனால் திருட்டுத்தனமாகச் செய்து குறுக்குவழிகளில் சுவர்க்கம் போக முனையக் கூடாது அல்லவா?

No comments:

Post a Comment