அண்மையில் வெளிவந்த ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றியோரில் 90 வீதமானோர் சித்தியடையவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சித்தியடைந்த மாணவர்கள் பற்றி அதிகம் பேசப்பட்டாலும் சித்தியடையாத மாணவர்கள் அடையும் உளவியல் ரீதியான தாக்கம் குறித்து பேசப்படுவது மிக மிகக் குறைவு என்றே சொல்லலாம்.
புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியான மறுதினம் உளவளத் துணையாளர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருக்கையில் அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசியவர் ஒரு ஆசிரியர்.
தனது மகன் இம் முறை புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றியதாகவும் ஓரிரு புள்ளிகளால் சித்தியடையத் தவறிவிட்டதாகவும் பெறுபேறு வெளியானதிலிருந்து தனது மகனால் வாய் திறந்து பேச முடியாதிருப்பதாகவும் அழாக் குறையாகவும் பதற்றத்துடனும் குறிப்பிட்டார்.
தனது மகனை அதிர்ச்சியிலிருந்து எப்படி மீட்பது எனவும் அவர் குறித்த உளவளத் துணையாளரிடம் ஆலோசனை கேட்டார். அவருக்கு உரிய ஆலோசனைகளை வழங்கிய உளவளத் துணையாளர் ஒரு முக்கிய உண்மையையும் என்னோடு பகிர்ந்து கொண்டார்.
ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடையத் தவறும் பிள்ளைகளில் அதிகம் உளவியல் ரீதியான தாக்கத்திற்கு உட்படுவது ஆசியர்களின் பிள்ளைகளே என புதிய ஆய்வு ஒன்றில் தெரிய வந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தமது பிள்ளைகள் மீது ஆசிரியர்களான பெற்றோர்கள் அதிக அழுத்தங்களைப் பிரயோகிப்பதே இதற்குக் காரணம் என்றும் அவர் சொன்னார்.
ஆசிரியர்களுக்குப் புரிந்தால் சரி.
.jpg)
No comments:
Post a Comment