விடிவெள்ளியின் இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகும் இக் காலப்பகுதியில் அதன் ஆரம்ப காலத்தை நினைத்துப் பார்க்கிறேன்.
விடிவெள்ளி என்றொரு பத்திரிகை வெளிவரவுள்ளதை அறிந்து கொண்ட எனது ஊடக நண்பர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அது பற்றிய தனது நிலைப்பாட்டை பகிர்ந்து கொண்டார்.
இப்படியொரு பத்திரிகை அவசியம்தானா என்றும் அது பற்றி தனக்கு சில சந்தேகங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டார். நானும் என்னால் முடிந்த விளக்கங்களை அளித்தேன். ஆனாலும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.
இது நடந்த சில மாதங்களின் பின்னர் தொடர்பு கொண்ட அவர் விடிவெள்ளியின் பணியை மெச்சியதோடு தன்னுடைய ஆக்கம் ஒன்றினை விடிவெள்ளியில் பிரசுரிக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.
மட்டுமன்றி சில மாதங்களுக்கு முன்னர் என்னை நேரில் சந்தித்த அவர் தனக்கு விடிவெள்ளியில் ஒரு வேலைவாய்ப்பைத் தர முடியுமா என்றும் கேட்டார்.
இதேபோன்றுதான் அப்போது விடிவெள்ளியை கடுமையாக விமர்சித்த பலரும் இன்று எம்மை அணுகி அவர்களது செய்திகளையும் கட்டுரைகளையும் பிரசுரிக்குமாறு வேண்டுகோள் விடுப்பதையும் விடிவெள்ளியின் வளர்ச்சிக்கு பங்களிப்பு நல்க முன்வருவதையும் எம்மால் அவதானிக்க முடிகிறது.
விடிவெள்ளியை சந்தேகக் கண்கொண்டு நோக்கியவர்களை சந்தோஷிக்கச் செய்து விட்டோமே...?
அல்ஹம்துலில்லாஹ்.

No comments:
Post a Comment