Thursday, 6 January 2011

இப்படியும் ஓர் இறைச்சிக் கடைக்காரர்


கடந்த ஞாயிற்றுக் கிழமை காத்தான்குடியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரை நிகழ்த்திய உலமா ஒருவர் இறைச்சிக் கடைக்காரர் ஒருவரைப் பற்றிச் சொன்ன சம்பவம் சபையோர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அண்மையில் ஹஜ் கடமைக்குச் சென்று வந்த குறித்த இறைச்சிக் கடைக்காரர் ஹஜ்ஜுக்குப் போன போதுதான் மாடு அறுக்கும் போது தக்பீர் சொல்லி அறுக்க வேண்டும் எனும் இஸ்லாமிய சட்டத்தை தெரிந்து கொண்டாராம்.

அப்படியானால் இதுவரை காலமும் அவர் அறுத்த மாடுகளைச் சாப்பிட்டவர்களின் நிலை என்ன? என்று கேட்டார் குறித்த உலமா.

கிட்டத்தட்ட 30 அல்லது 40 வருடங்கள் அவர் இறைச்சிக் கடைத் தொழிலை செய்து வருகிறாராம். ஆனால் அவருக்கு தான் செய்யும் தொழில் பற்றிய மிகவும் அடிப்படையான இஸ்லாமிய அறிவு கூட இல்லையென்றால் இந்த `அறிவு, ஆன்மிக வறுமை' நிலைக்கு யார் பொறுப்பு?

உலகக் கல்வி, மார்க்கக் கல்வி எனும் இரு வேறு கூறுகளாகப் பிரிக்கப்பட்ட போதனா முறையைக் கொண்ட நமது சமூகத்தில் ஒரு சாரார் இப்படித்தான் மிகச் சிறிய விடயங்களைக் கூட அறிந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் இன்றி தமது முழு வாழ் நாளையுமே கழித்துக் கொண்டிருக்கிறார்கள்..... இதை யாரிடம் சொல்லி அழ?

No comments:

Post a Comment